Sunday, August 8, 2010

நோன்பு பிடித்த கள்வன்



  பிரித்தானிய குடி மக்களின் அன்றாட வழக்கங்களில் ஒன்றாம் நாள்தோறும் காலையில் அன்றாட கடமைகளுக்குச் செல்லுகின்ற போது வீதியில் கடமைகளில் நிற்கின்ற பொலிசாருக்கு காலை வணக்கம் சொல்வது.அவ்வாறு சொல்வதால் அன்றைய நாள் ஒரு சிறந்த நாளாக அமையும் என அவர்கள் நம்புகிறார்.

ஆனால் நமது நாட்டில் போலீசாருக்கும் மக்களுக்குமான தொடர்பு..? 

நான் அண்மையில் சந்தித்த இரு போலீஸ் உத்தியோகத்தர்கள் என்னை ஈர்த்தவர்கள். மரியாதைக் கூறியவர்கள்.
நாம் எமது அலுவல்களை முடிக்கச் செல்கின்ற இடங்களில் கடமையில் இருப்பவர்கள் நல்ல மனிதர்களாக அமைவது நாம் பெறும் பேறாகும்.

கடந்த மாதம் எட்டாவது நோன்பு தினத்தன்று 'ஷகர்' செய்துவிட்டு வந்து தூங்கிய சமயம்எனது விடுதியில் வைத்து திருட்டுப் போன பணம்,பொருள் சம்மந்தமாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காகச சென்றிருந்தேன். என்னுடன் விடுதி முகாமையாளரும் வந்திருந்தார். முறைப்பாட்டினைப் பதிவு செய்த சாஜன் குணவர்த்தன மிகவும் நல்லவர்.மிகவும் அக்கறையுடன் நடந்து கொண்டார்.

"உங்கள் விடுதியில் உள்ளவர்களில் யாரிலேனும் சந்தேகம் இருக்கிறதா?" என வினவினார் இல்லையென்றேன். உங்கள் அறைக்கு முன் அறையில் இருப்பவர் யார்?,என்ன செய்து கொண்டிருக்கிறார் நல்லவரா? அவரில் சந்தேகம் இல்லையா? என்றெல்லாம் வினவினார் நானும் இல்லை என்றுவிட்டு "அவர் மிகவும் நல்லவர். இன்று என்னிடம் வந்து எல்லாவற்றையும் களவு கொடுத்து விட்டு நிட்கிரீரே செலவுக்கு பணம் இருக்கிறதா? தரவா? என்று வினவிய ஒரே மனிதர் அவர்தான் என்றேன்."அப்படியானால் எனக்கு அவரில்தான் சந்தேகம். பிடித்து இரண்டு தட்டுத்தட்டி  விசாரிப்போமா?"  என்றார் 

நான் வேண்டாம் என்று மறுத்ததோடு "எனது பொருள், பணத்தையும் பறி கொடுத்துவிட்டு அநியாயமாய் ஒரு நோன்பாளியை தண்டித்த பாவம்களையும் சுமக்கவேண்டுமா?" என்றேன்                         

சிரித்துக்கொண்ட அந்த சாஜன் கூறினார்:

வருடத்தில் வரும் இந்த நோன்பு மாதத்தில்தான் எண்கள் போலீஸ் நிலையத்தில் அதிகப் படியான குற்றச்செயல்கள் பதிவாகின்றன. நள்ளிரவு பனிரெண்டு மணிவரை நடமாடுகின்ற சந்தேகத்துக்கிடமானவர்களைப் பிடித்து விசாரித்தால் "தராவிஹ்" தொழுகைக்குப போய் வருவதாகக் கூறுகிறார்கள் அதிகாலை ஒரு மணிக்குப் பின் வருகின்றவர்களை விசாரித்தால் "ஷகர்'' செய்துவிட்டு வருவதாகவும் கூறுகிறார்கள் எங்களால் எதுவும் செய்ய முடிவதில்லை."  

அண்மையில் மூன்று இளைஞர்கள் ஓர் அறையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டார்கள். விசாரித்தபோது தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்து "நாங்கள் முஸ்லீம்கள் நோன்பு பிடித்திருக்கிறோம் என்றார்கள்.  

"இப்படியாக குற்றச் செயல்களில் ஈடு படுகின்ற வர்கள் சமயக் கடமைகளையும் தமக்கு ஆயுதமாக பயன் படுத்திக் கொள்கின்றார்கள்."எனப் புரிந்துணர்வுடன் கூறினார்.

நான் ஏற்றுக்கொண்டேன் 

பிற்பகல் 02.30 மணியைக் கடந்தும் உணவுக்குச் செல்லாதிருந்து அறையினைப் பார்வையிட்டு, முறைப்பாடு பதிவு செய்து, முறைப்பாட்டுப் பிரதி பெறவும் உதவிசெய்தார் எதுவித எதிர் பார்ப்புமின்றி!

பின்னர்,

துறைமுகத்துக்குள் கடமைக்கு வரும் தமிழ் போலீஸ் நண்பன் களவுபோன விடையத்தைக் கேள்வியுற்று என்னை ஆறுதல் படுத்தி எது நடந்தாலும் நன்மைக்காக இருக்கும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி இஸ்லாமிய நட்சிந்தனையில் கேட்டதாக பின்வரும் கதையை என்னிடம் கூறினார்.
அபூர்வமாக ஒரு கெட்டவனும், நல்லவரும் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும ஒரு வழியால் செல்கின்றபோது பள்ளிவாயலில் "பாங்கு" சொல்லப்பட, உடனே நல்லவர் பள்ளிக்குச் சென்று தொழுகையை முடித்துக் கொண்டு வருகிறார் மற்றவனோ அதனை அவமதித்து பள்ளி முன்றலில் நின்று "என்னடா பள்ளியும்  தொழுகையும்" என அவரை நையப்புடைத்து அங்கே சிறுநீர் கழித்துவிட்டு வருகிறான் . 

இப்போது இருவரும் ஒன்றாகப் போகும் போது, தொழுதுவிட்டு வந்த நல்லவனுக்கு கல்லடிபட்டு காலிலே காயம் ,இரத்தம் சொட்டுகிறது. கெட்டவனோ அதிஸ்டவசமாக ஒரு திர்கம் பணத்தையும் வழியில் கிடந்து புறக்கிக் கொள்கிறான். 
இப்போது அந்த நல்லவனைப் பார்த்து கெட்டவன் கேட்கிறான் 
"பார்த்தாயா பள்ளி சென்று தொழுதுவிட்டு வருகின்ற உனக்கு காலிலே காயம், எனக்கோ கையிலே 
பணம் 

அப்போது அந்த வழியால் இஸ்லாமிய மார்க்கப் பற்று மிக்க ஒரு தீர்க்க தரிசி வருகிறார். உடனே அந்த தீர்க்கதரிசியிடம் அந்த இளைஞன் முறைப் படுகிறான். 

அனைத்தையும் கேட்டுவிட்டு அந்த தீர்க்கதரிசி கூறுகிறார் 
"நிச்சயமாக நீ செய்த நற்செயல் வீண்போகவில்லை. நீ இன்றுப் புரிந்த நட்செயலினால்தான் பெரியதொரு உயிர் ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறாய். மாறாக ,அவன் புரிந்த தீய செயலினால்தான் அவனுக்குக் கிடைக்க இருந்த இலச்சக் கணக்கான திர்கம்கள் ஒரே ஒரு திர்கமாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.

எங்கள் தேசம் 
2008.10.15           

No comments:

Post a Comment