Thursday, January 14, 2010

'போன்சாய்' மனிதர்கள்

ஒரு சதுர அடிப் பரப்புக்குள் முப்பத்தைந்து, நாப்பது வருடங்கள் நிறைந்த ஆல விருட்சம்  வேர்விட்டு, விழுதுவிட்டு சிறியதொரு சட்டிக்குள் நிக்கிறது. பல வருடங்கள் நிரம்பிய ஒரு தோடை சிறியதொரு சாடிக்குள் பூத்து, காய்த்து,பழுத்து நிற்கிறது
குறைந்தது ஐம்பது பழத்தையேனும் வெட்டிப் பிழியவேண்டும் ஒரு கிளாஸ் பானம் தயாரிக்க. ஆனால் அது உண்பதட்கல்ல அழகுக்கு மாத்திரமே என்கிறார்கள் போன்சாய் தாவரவியலாளர்கள்.

கொழும்பு கலாபவனத்தில் பலவகையான கண்காட்ச்சிகள் அவ்வப்போது இடம்பெறுகின்றன  அதில்ஓவியம், புகைப்படம்,சிற்பம் மட்டுமன்றி போன்சாய் தாவரவியல் கண்காட்சியும்இடம்பெறுகின்றன.பெருபாலும் அனைத்துக்குமே  பார்பதற்கான அனுமதி  இலவசமாகத்தான் இருக்கிறது.சென்ற ஆண்டு இறுதிப் பகுதியளவில் இடம் பெற்ற ஒருபோன்சாய்தவரவியல் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.ஜப்பானிய போன்சாய் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அந்த கண்காட்சி பலரையும் வியக்க வைத்தது.
 
நட்டு ஒருவருடத்தில் தென்னை காய்க்கும், ஆறு மாதங்களில் பலா மரம் காய்க்கும், பழுக்கும்; நாற்பதே நாட்களில் முருங்கை பூக்கும், காய்க்கும்; ஒருசில வாரம்களிலேயே சோளம் கதிர்விடும் ,அவரை காய்க்கும் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போவார் எழுத்தாளர்எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்கள். இவை எல்லாவற்றையும் அவரது தோட்டத்தில் நிகழ்த்தி காட்டவும் செய்கிறார் ஒரு மேஜிக் காரன்போல் .இலங்கையில் உள்ள விவசாய போதனா பீடங்கள் முதற்கொண்டு இந்தியாவுக்கும் சென்றுஅங்கிருந்து கொண்டுவரும் விதை இனம்களை விளைவித்து இந்த வித்தையைஇயற்கையாகவே  நிகழ்த்திக் காட்டுகிறார்.இந்த ஆண்டின் தொடக்கப்பகுதியில் கொழும்புக்கு வந்திருந்த எஸ்.எல்.எம்.எனது அறையில்  என்னையும்  சந்தித்தார்  தனது பைக்குள்ளிருந்து வெளியே எடுத்த ஒருபேனரை விரித்து இது ஆறுமாதத்தில் காய்க்கும் பலா என்றார். அவரது சிறுவயதுபேத்தியை ப்லாவுக்குப்பக்கத்தில் நிறுத்தி படம் பிடித்திருந்தார். அவரது பேத்தியின் உயரத்தைவிட  சற்றே உயரம் கூடிய அந்தப்பலா பேத்தியின் இடுப்புயரத்துக்கு மூன்று காய்களை காய்த்து நிலத்திலே பரத்தியிருந்தது பார்க்க அபூர்வமாக  இருந்தது. தனது பைக்குள் மீண்டும் கையினைவிட்ட எஸ்.எல்.எம்.இந்தப்பலாப்பலத்தில் உனக்கும் ஒரு சுளை கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிட்டுப்பார் என என்னிடம்  நீட்டினார். வாங்கி கடதாசியை பிரித்துப் பார்த்தபோது மாம்பழத்தை அறுத்ததும் கொட்டையோடு ஒட்டித் தெரியும் நிறம் போன்று சிவப்பாகவும் தேர்ச்சியற்றவர்கள் செய்த கொளுக்கட்டை போன்று குண்டாகவும் சுவர் கனதியாகவும் இருந்தது. கிழித்து வாயில் வைத்தேன் வெல்லமாக இனித்தது. அறைமுழுவதும் மணம்.

அன்றே எஸ்.எல்.எம்.அவர்களுடன் எங்கள்தேசம் காரியாலயத்துக்கு சென்றிருந்தபோது சகோ,அஸாம் அவர்களிடமும் பலாவுடன் பேத்தி இருக்கும் பேனரை காண்பித்து  பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடலின்போது அஸாம் அவர்கள் போன்சாய் தாவரங்கள் பற்றி என்ன நினைகிறீர்கள் எனக் கேட்டதற்கு எஸ்.எல்.எம். அளித்த பதில் முக்கியமானது .மனிதனின் மனம் குறுகிப்போனதன் வெளிப்பாடு அது என்றார்.மனிதனின்
வக்கிரபுத்தி.மரங்களின் வாழ்வியலை நிர்ணயிக்கும் உரிமையை மனிதர்களுக்கு யார்தந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்
 
வாஸ்தவம்தான்!
குறைந்தகாலத்தில் கூடிய விளைச்சலைப் பெறுவதற்காக சிபாரிசு செய்யப்பட்ட நெல், தானிய வகைகள்,காய்கறி வகைகளை உற்பத்தி செய் கின்ற இன்றிலேயே உலகம் பாரிய உணவுத்தட்டுப்பாட்டை எதிர் கொள்கிறதென்றால் எதற்கு போன்சாய் மரங்கள்? உலக உணவுத்தட்டுப்பாட்டை  உலக நாடுகள் எப்படி நிவர்திக்கப்போகின்றன? போன்சாய் மரங்களை கைவிட்டு உலக மனிதர்களையெல்லாம்  போன்சாய்மனிதர்களாகசிறுக்கவைதால் உலக உணவுப் பிரச்சினை தீருமோ,என்னவோ?
 
( எங்கள் தேசம்  -.2008.08 .15   )